Monday, June 23, 2008

கோடைக்கால திருவிழா!


சென்ற வார இறுதியில்,
ஹவாய் ஏர்லைன்ஸ்... கோடைகாலத்தை வரவேற்க ஒரு விழா கொண்டாடி... (இதெல்லாம் ஓவர்னு நீங்க சொல்றது எனக்கே கேக்குது) எங்களையும் (ஐ. டி வெட்டி ஆஃபிசர்ஸ்) வரவேற்றது.

ஏர்போர்ட் அருகே இருக்கும் என எண்ணி, பேருந்து பிடித்து மொத்த வெட்டி ஆஃபிசர்ஸ் கும்பலும் ஏர்போர்ட் அருகே சென்ற பின்னர் தான், அது ஒரு 20 நிமிடம் நடை போட வைக்கும் என புரிந்தது... இஸ்ரேலை சேர்ந்த ஒரு சக ஆஃபிசர், டேக்சி பிடிக்கலாம் என கூறியதும், ஒரு கிங் சைஸ் லிமோசைன் வந்தது... சும்மா சொல்லக்கூடாது... 10 $ கொடுத்து லிமோ ல போன மொதல் தமிழர்கள் என்று நாங்களும் சரித்திரத்தில் இடம் பிடிச்சிட்டோம்ல... ;)
கொடுத்த 10$ சரியாகும் வகையில் பல வகையிலும் கேமராவை க்ளிக் செய்து பின்னர் விழா இடத்தை கஷ்டப்பட்டு அடைந்தோம்.



ஏர்போர்ட் பக்கத்துலேயே ஒரு ஏரியாவை வளைத்துப்போட்டு, குழந்தைகள் விளையாட உபகரணங்கள்.. பெரியவர்கள் மொக்கைகளை தவிர்த்து எஸ்கேப் ஆக ஒரு லைவ் பேண்ட்….. கிடார், ட்ரம்ஸ் எல்லாம் வெச்சிட்டு ராக், பாப், கன்ட்ரி ன்னு ஒரு பக்கம்..... அத விட அல்டிமேட் ரெண்டு விஷயம்... Thanks for the hardwork.. Mahalo ... உங்கள் உழைப்பிற்கு நன்றி.. என்ற பெரிய பேனர்... நெஞ்சை தொட்டுட்டாங்கையா.... ;) அல்டிமேட் மேட்டர் என்னனா... ஒரு பெரிய போயிங் ப்ளேனை ஓட்டிட்டு வந்து, பார்ட்டி ஏரியால விட்டுட்டாங்க... லகேஜ் ஏரியா, கன்ட்ரோல் ஏரியா... காக்பிட் உட்பட எங்கு வேணும்னாலும் சுத்தி பாக்கலாம்.. அப்படின்னு...



உள்ளே போனதும், சாப்பாடு ஐடம் என்ன இருக்குன்னு தேடிப்பாத்தா... ஹாம்பர்கர், ஹாட் டாக் அப்படின்னு off பண்ணிட்டாங்க... நாங்க எப்பவும் போல தாக சாந்தி (coca cola and plain water) செய்த பின்னர்... ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் எங்கன்னு யோசிச்சிக்கிட்டே நின்றிருந்த விமானத்தில் ஏறினோம்...

கோவிந்தா.. கோவிந்தா ரேஞ்சுல சின்ன க்யூ நின்னு விமான ஓட்டுனர் (அதாங்க தமிழ்ல பைலட்) இடத்துக்கு வந்தோம்... அதுக்கு முன்னாடி நம்மவர்கள் அனைவரும் இது ஏர் ஹோஸ்டஸ் ஒக்கார இடம்னு, flight attender சீட்ல உக்காந்து மகிழ்ச்சி தவழ புன்னகைத்தார்கள் ;)

பைலட் இடத்திற்கு சென்ற பின்னால், அவரை கொஞ்சமாய் மக்கள் மொக்கை போட்டு, சில பல தகவல்களை உள் வாங்கி, க்ளிக் முடித்து வெளியேறினோம்...

அதுக்கப்புறம் - patty இல்லாத ஹாம்பர்கர்கள் மற்றும் பெயர் அறியாத உணவு வகைகள் சிலவற்றை உள்ளே தள்ளி.. ;) எஸ்கேப் ஆகலாம் என்று முடிவெடுத்தோம்..

ஹாம்பர்கர் அளித்த ஒரு ஆன்ட்டி , நிறுவனத்தில் பணிபுரியும் சீனியர் டைரக்டர் என்பதும்... பார்ட்டி விட்டு வெளியே வந்த எங்களை ஒரு வேனில் ஏற்றி அருகே உள்ள பேருந்து நிலையத்தில் (அதாங்க தமிழ்ல பஸ் ஸ்டான்டு) ட்ராப் செய்த நபர் கஸ்டர் சர்விஸ் வைஸ்-ப்ரிசிடன்ட் என்பதும்..... நெஞ்சை லேசாக நெகிழ வைத்தது...

வளம் சிறக்க வாழ்த்துக்கள்.... Aloha

Monday, June 16, 2008

ஹவாய் வாழ்க்கை

இதோ.. ஓடிவிட்டது ஒரு மாதம்... ஹவாய் வந்து, ஹாய்யான வாழ்க்கைதான்...

ஊரை பற்றி...
அழகு.... இயற்கை அன்னை கொட்டி கொடுத்துள்ளாள்...
அதைவிட, இந்த மானுடர் அதை கட்டி காப்பாற்றுகிறார்கள்....


சாலை எங்கும் மலர்கள்... கொன்றை மரம் .. எல்லா வண்ணங்களிலும், மஞ்சள் மட்டுமே நான்கைந்து வகைகளில்...

செம்பருத்தி செடிகள்... சாலை ஒரங்களில்.. நான் பார்த்து இதுவரை இருபது வகைகளாவது...
கழிவு நீர் கால்வாயில் மீன்கள் துள்ளி விளையாடும்... மீன் பிடிக்காதீர்.. இது அசுத்தமான நீர் என்று ஒரு பலகை... அட சாமி... 5 அடி ஆழத்தில் பளிங்கு தண்ணீர்...

பசுமை மலைகளின் தொடர்... அங்கு டயமண்ட் ஹெட் என்று ஒரு காலத்தில் கோபப்பட்டு இன்று அமைதியாக இருக்கும் எரிமலை குன்று...

மக்களை பற்றி சொல்ல வேண்டும்... போன முறை டெக்சஸ் மாநாட்டில் இருந்த போது, ஆடம்பரம் அள்ளி வீசும்...
இங்கு பொருளாதார நிலை கொஞ்சம் மோசம்தான்...
ஆனால், ஜப்பானிய கலாச்சார தாக்கம்....
வழி சொன்னாலோ, பேருந்தில் இருக்கை தந்தாலோ.
தலை தாழ்த்தி, இதழ் சிரித்து, நன்றி என்னும் போது,
ஒரு மகிழ்ச்சி.....

நான் வாழ்வதோ வைக்கிகியில்...
வானுயர்ந்த ஹோட்டல்கள்...
வகைவகையான உணவு விடுதிகள்....
கடற்கரை ஓரத்தில் களி சேர்க்க காரணிகள்...

தினசரி, பேருந்து பயணம்...
(இதை பற்றி தனியே எழுத வேண்டும், இப்படித்தான் பேருந்து இருக்கவேண்டும்)
தினம் இந்த 2 மணி நேரம்,
வைரமுத்து, வாலி, தாமரை என
எல்லா கவிஞர்களுடனும் என்னை நட்பாட செய்கிறது...

மாலை நடை பயில...
1 மணி நேரம்... கோல்ஃப் கோர்ஸ் தென்னை மரங்கள்
நீரில் ஓடி ஒளியும் மீன்கள்...
மீன் பிடிக்க ஒரு காலில் காத்திருக்கும் பறவை...
அவ்வப்போது தென்படும் வாத்துக்கூட்டம்...

ரோலர் போர்டு ஏறி வித்தை காட்டும் இளைஞர்கள்...
நாய் குட்டியை குழந்தையை போல நடத்தி செல்லும் நண்பர்கள்..
காதலர் கையில் கையை பிணைத்து கடற்கரை செல்லும் பாக்கியவான்கள்...

70 - 80 வயதிலும், வாழ்க்கை துணையோடு,
கையில் தடியோடும், விழியில் புன்னகையோடும்.
ஒருவருக்கொருவர் துணையாக, இணையாக,
மென்நடை நடந்திடும் மெலிந்த பெரியோர்கள்...

கடற்கரை சென்றாலோ,

நடைபாதை முழுதும் வித்தை காட்டும் நண்பர்கள்...
சாயம் பூசி சிலையாக நின்று சில்லரைகள் சேர்ப்பார் சிலர்...
மாயம் செய்து வித்தை செய்து மகிழ்விப்பார் சிலர்..
மின்னல் வேகத்தில் முகத்தை ஓவியமாக்கும் சிலர்..
வண்ண கிளிகள் தோளில் அமர வாடகை கேட்கும் சிலர்..

அலையை பாதையாக்கி, பலகை மேல் நின்றே,
கலையுடன் விளையாடும் பலர்...
கரையின் முனையில், அலையின் நுரையில்,
பாதம் நனைக்கும் பலர்..
காற்றின் மென்மையில், காதலின் வன்மையில்,
காவியம் எழுதும் சிலர்..
நடுவில்.... கல்லின் மேல் அமர்ந்து, கடலலை கண்டு,
கண்ணீரோடும் சிலர்..

என்னுடைய வெறுமையை எல்லாம் வேறாக்கி
என்னை எனக்கு மீண்டும் அறிமுகம் செய்த ஊர் இது...

வாழ்க நீ...
ஒரு ஏக்கம் மட்டும் உண்டு.... என்றேனும் ஒரு நாள்...
என்னுடைய சென்னையும் உன்னை போல் ஆக வேண்டும்...

Sunday, June 15, 2008

தந்தையர் தினம்

இன்று தந்தையர் தினம்....


தொழிலாளர் தினம், காதலர் தினம், எத்தனை தினங்கள்...
எங்கிருந்து முளைத்தன இந்த புதிய நாட்கள்?
யார் கொண்டு வந்தனர், யாவருக்காக?
வாணிப ரீதியில் வளம் சேர்க்கவோ,
வரண்டிடும் மனங்களில் ஈரம் சேர்க்கவோ?

எண்ணிரண்டு வருடம் முன்னே இவை ஏதும் பிடிக்கவில்லை...
அன்பினை வெளிப்படுத்த நாள் ஒன்று தேவையில்லை...
ஒவ்வொரு நொடியும் தானே துலங்கிடும்...
அதற்கு வாழ்த்து அட்டையோ, வண்ணப் பூக்களோ அவசியமில்லை...
என்று நான் நினைத்திருந்தேன்.... அப்போது அனைவரும் அருகில்


இன்று நான் தனிமையில்,
வடிகட்டிய வார்த்தைகள்...
இயல்பை இழந்த நடைமுறைகள்...
சூழலுக்கேற்ற வழிமுறைகள்....
என்னை இழந்து நான்...

உரக்க பேசவோ, உணர்வை கொட்டவோ
வடிகால் இல்லாத, வரம்புக்குட்பட்ட,
பழைய சுவடுகளால், பண்பட்ட
என்னை இழந்த நான்...

தந்தை நினைவுகளில்..
தந்தையான நான் நினைவுகளில்...

என் இளமை காலத்தில்,

எவர்க்ரீன் சூப்பர் ஹீரோ...
என் தந்தை..
கைகளை மடக்கும் போது, எட்டிப்பார்க்கும் தசை முட்டை ...
தொட்டுபார்த்து மகிழ்ந்த நினைவு.

எங்களை எண்ணையில் மூழ்கித்து,
ஜெயன்ட் ரோபாட் என தலை மீது தூக்கிய நினைவு.

அவ்வப்போது, பக்கத்து தெரு பகோடா வாங்கிவந்து,
சுவையான பால் சாதத்தை, அறுசுவையாக்கிய நினைவு...

ராஜ்டூட் பைக் டாங்கின் மேல் உட்கார்ந்து,
அப்பா பார்வை மறைக்காமல்,
கழுத்தை சாய்த்து உட்கார்ந்தும்,
காற்றின் வேகத்தை கண்ணில் வாங்கிய நினைவு...

மிதிவண்டி கற்றுதர போரூர் ஊர் சென்று,
1 ரூபாய் வாடகை சைக்கிள் ஏறி,
செம்மண் புழுதி வாரிய நினைவு...

வாக்கிங் என்ற பெயரில்,
சற்றே தூரம் நடந்து,
சுவையாக தேநீரும், பட்டர் பிஸ்கெட்டும்,
இரசித்து பருகிய பின்..
சலைக்காமல் பல பேசி...
இளைத்த காலை பொழுதுகள்....

......

அரும்பிய மீசை....
அதிகரித்த குறும்பு,
குறைந்த மதிப்பெண்,
அறையப்பட்ட அடிகள்...

காலை மடக்கி சுவற்றின் ஓரம்,
நாற்காலி நிலையில் நிற்க சொன்னாலும்,
நான்கு எண்ணுவதற்குள் முடியாது என்று,
முறைத்து, முணுகி,
உதை வாங்கிய நாட்கள்....

சும்மா ஒன்னும் அடிக்கவில்லை...
ஒழுங்காக படிக்கவில்லை...
இந்த கணக்கு பாடமும் கடவுள் போலத்தான்...
எந்த நிலையிலும் ஏதும் விளங்கவில்லை...

.................

ஐந்து ரூபாய் தந்தாலும்,
ஏன் எதற்கு கேள்விகள்...
நேரு சொன்னாராம்... நம்பினால் கேள்வியில்லை.. நம்பாவிட்டால் பதிலில்லை என்று...
நான் சொல்லியிருந்தால், இடையணியும் பெல்ட் கையேந்தப்பட்டிருக்கும்...
கோபக்கார அப்பா..... ஆனாலும் பிடிக்கும்....

.....

அவர் கண்கள் நீர் தளும்பி சில முறை நான் பார்த்ததுண்டு...
பல நேரங்களில் நானே அதன் காரணம்...

ஐ. ஏ. எஸ் ஆகனும்.. எஞ்சீனியர் ஆகனும்...
என்றெல்லாம் வளர்த்தாலும்...
என்ன செய்ய... என்னுடைய சோம்பேறி தனத்திற்கு,
கிடைத்தது பேமன்ட் சீட்தான்....
ஆனால் நல்ல விஷயம்.. நானும் எஞ்சீனியரானேன்...

அத்தனை மோசமில்லை... ஏதோ நானும் வளர்ந்துவிட்டேன்...
முடிந்தவரை முயற்சிக்கிறேன்... வாழ்கிறேன்...
லைட்ஹவுஸ் வெளிச்சம் காட்டி செல்லுவது போல..
அப்பா முகத்தில் வெகுசில முறை புன்னகையை, பெருமிதத்தை
என்னாலும் உண்டாக்க முடிந்தது....

இதோ வழித்தோன்றல்...
அப்பாவிடம் வாங்கிய அடிகள் விட இவனிடம் இதுவரையுமே நிறைய வாங்கியுள்ளேன்...

அவன் அடம் பிடிக்கும் போது, நான் அதட்டினால், அப்பாவில் முகத்தில்தான் எத்தனை புன்னகை!



ஹேப்பி ஃபாதர்ஸ் டே...

Saturday, June 14, 2008

Past, Present and Unseen

Weekend begins...
and heights of laziness....
but bored...

Started a phunny game... to build a poem...

The alternate colors of conversation between me and Aki dude...


One big roar at the chime of school bell ring
None can stop us flying with a wing..
Winsome smile  through ups and downs...
With friends around walking side to side....

Falling and rising at each path,
Dreaming and aiming with each breathe,
Somehow the childhood got its wing,
And the bubbly teen came with swing


Ooooh… All of the sudden..
The other gender is always bright…
Adrenalin is working right….
Fall in Love and every day is a flight

Garden, parks and private cafeterias,
Are all discoveries of modern Columbus,
Lengthy hours of togetherness,
Could never satisfy the blooming heart
.

The lengthy drive with swifts and curves…
Many a crushes and bumps and breaks…
The course is long, the purpose is baffling
I know… ah no… not pretty sure..

Adolescent brings a permanent pause,
Responsibility prevents the reverse thoughts,
There is often joy without laughter,
We realize there is more in the platter


Moving on… asset creation, movable and immovable,
Rowing on… rough white water falls…
You can’t hear.. You can’t speak…
All you can do is to row it hard….

The destination isn’t that far…
Wish i knew, it's just for fun…
But still you are determined, to prove…
Straining the muscle and pumping each vein….

Memory fades with passing days,
There is no fun in any play,
There is no race to win,
But an ardent urges to move ahead.

Reality is never realized,
And nothing seems to be bright,
At each point we recall the childhood,
With each thought we cherish our lovely moments,


I realize that  life is not too long….
But it is something like a  beautiful song..
Why to worry about what happens at the end.
When you have the entire world by you to spend…

At the end of the glory game,
The king and pawn may be just the same.
But while game is being played..
Every piece is so famed..

You are special… for what You are…

Tuesday, June 10, 2008

நன்றி கவிஞர்களுக்கு

ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை

கலக்கிடாருயா கலக்கிடாருயா………………….

அவர் எழுத்துக்களை பார்த்து அவர் நினைவில் இன்றைய கிறுக்கல். ………………….பிழை பொறுக்கவும்.

வைரமுத்து.... சற்றே காசுக்காக ஆசு பாடியிருந்தாலும்,
கற்பனைக்காகவும், கவிதைக்காவும் கணை தொடுத்தவர்தாம்..
இவர் பாரதியையும், வள்ளுவரையும், சங்க பாடலையும்
நம்மவர் வாயில் வரச்செய்தவர்...

ஆம்பலும், மொவ்வலும், நமக்கு தெரியாமலே போயிருக்கும்...
குனித்த புருவம் .. அப்பாடல் மறந்து போயிருக்கும்..
தனித்தமிழ் உச்சரிப்பு, விவேக் நகைச்சுவை மட்டுமே என்று
இனி வரும் எதிர்காலம் நினைத்திருக்ககூடும்.

நன்றி கவிஞர்களுக்கு, இவர்கள் கவலைகளை மட்டும் அல்ல, காலத்தையும் வென்றவர்கள்..

Friday, June 6, 2008

புன்னகை

மெல்லிய பசுமை குடில்,
தினம் மென்மையாக தெளிக்கப்படும் தண்ணீர்
ஊட்டங்கள் சேர்த்திட உரங்கள்
காய்ந்த இலைகளையும் கத்தரிக்க விரல்கள்..
மொட்டு விட்டு மலரும் வரை இரசித்திட சில விழிகள்...

இவை எதுவுமே நான் அறியவில்லை...
எனது மெல்லிய மலர்களை யாரும் விரும்பவில்லை..
வேலிகாத்தான்... முட்களை ஏந்தி நான்.....

மண் வாசனை தெரிந்த மண்ணிலும் கூட
எருமை மாடு கட்டவும், எரி பொருளாகவும்,
செலவில்லாத சுவராகவும் மட்டுமே வாழ்ந்த நான்....

என்ன வாழ்க்கை இது என்று ஆக்சிஜனை அள்ளி வீசியபோது,

எனதருகே இது வரை வாழ்ந்து,
மாடுகளின் குளம்புகளில், நசுங்கி வீழ்ந்த
சின்ன செடியொன்று சொன்னது...

அண்ணா.... உங்களை போல் பிறந்திருக்க வேண்டும்....

புன்னகைத்தேன்... என் வாழ்க்கை மோசமில்லை...