Showing posts with label Kirukalgal. Show all posts
Showing posts with label Kirukalgal. Show all posts

Saturday, May 8, 2010

பிரிவு கொடியது...

அப்பா... நான் பவர் பஞ்ச் அடிச்சா நீங்க தாங்க மாட்டீங்க... என்ற படி கிங் கமஹமேஹா பஞ்ச் என உரத்த குரலில் வயிற்றில் ஓங்கி அடித்தான்.... (இது dragon balls பார்க்கிறவர்களுக்கு புரியும் ;-) ) நான் வயிற்றை கொஞ்சம் இறுக்குவதற்கு முன்னால் அடித்ததால் சரி வலி.... டிஸ்னி எக்ஸ். டி... கார்ட்டூன் நெட்வோர்க் எல்லாம் சேர்ந்து ஆதித்தியனை கொஞ்சம் வன்முறை பிரியனாக மாற்றியுள்ளது.

தினமும் தூங்கும் போது, அவன் கைகளின் நான் படுத்துக்கொள்ள வேண்டும்.... நான் படுக்கையறை வரும்போதே, யெஸ... கழுத்து வந்தாச்சு, இனிமே தூங்கலாம் என்று கூதூகலிப்பான்.... என் கழுத்தை சுற்றி அவன் கைகளை இறுக்கித்தான் தூங்குவான்.... போதுமான கதகதப்பு இல்லையென்றால், முட்டியால் மோதி, பலவாறும் அட்ஜஸ்ட் செய்து என்னை பொம்மை போல் மாற்றுவான்.... பல நாட்கள் சலிப்படைவேன்... ஆதி... ரொம்ப டயர்டா இருக்கு.. ப்ளீஸ் வேண்டாம் என்று கொஞ்சினாலும் விடமாட்டான்...

ரிப்பீட்டேய் கேம் வேறு.... எதை சொன்னாலும் அப்படியே திரும்ப திரும்ப சொல்லுவான்... கடைசியில் வான் சிறப்பு தான் என்னை காப்பாற்றும்... துப்பார்க்கு துப்பாய... குறள் சொல்லி நான் ஜெயிப்பேன்...அவனும் தூப்பாக்கு... என துவங்கி அதே நடையில் வார்த்தைகளை மாற்றி Cheating Cheating என்று சண்டைக்கு வருவான்...

டி.வி பார்க்க விடமாட்டான்... அவன் சாப்பிடும் போது அவன் ப்ரோக்ராம் தான் பார்க்க வேண்டுமாம்.... நான் ரிமோட் கன்ட்ரோல் எடுத்தால் அவன் முகம் சோகமாகி விடும்.... ஒரு கொட்டு வைத்துவிட்டு ரிமோட்டை அவனிடமே கொடுத்து விடுவேன்....

வெளியே சென்றால் இன்னும் தூக்கி செல்ல வேண்டும் என்று அவ்வப்போது அடம் பிடிப்பான்.... வளந்துட்டடா... இனிமே உன்னை தூக்க முடியாது என்று சொன்னாலும், அவனை தலை மேல் தூக்கி உட்கார வைத்து செல்வதில் எனக்ககும் ஒரு மகிழ்ச்சிதான்... முதுகு வலி இருந்தாலும், அவனை தூக்கி கொண்டு சண்டை போடுவேன்...

.கோடை விடுமுறையில் அவன் நண்பர் பலரும் ஊருக்கு சென்றதாக பல நாள் பேசியுள்ளான்... என்னால் முடிந்த்து... விடுமுறை நாளில் மட்டும்,சுற்றமும் நட்பும், சுற்றி காணலும் காட்டினேன்... சென்ற வாரம் உறவினர் சிலர் பெங்களூரு செல்வதாக கூறியிருந்தனர்... ஆதி வயதின் இரு சிறுவரும் அங்கு செல்வதாக இருந்தது... 4 நாட்களாக ஆதித்தியன் தானும் பெங்களூரு செல்வதாகவும், தான் வளர்ந்து விட்டதாகவும், பாட்டியிடம் பத்திரமாக இருப்பேன் என பலவும் கூறி எங்களிடம் அனுமதி பெற்றுவிட்டான்... நேற்று இரவு அவனை காவேரி எக்ஸ்பெரஸ் இரயில் ஏற்றி வழியனுப்பினோம்...

திரும்ப வரும் போது, ஹாட் சிப்ஸில் மசாலா பால் குடிக்க நானும், துணைவியாரும் அமர்ந்தோம்...இருவருக்கும் கண் கலங்கியிருந்தது.... அதிகம் பேச முடியவில்லை... என்றோ ஒரு நாள், கல்வி என்றோ, வேலை என்றோ என்னை விட்டு பிரிவானோ என்று ஏதோ ஒரு எண்ணம்..... மன அழுத்தம்...

காலை முதல் நேரத்தை எப்படிகழிப்பது என தெரியவில்லை..... நண்பர்களின் ப்ளாக் பக்கங்கள், பிடித்த இணையங்கள்... பிக்காஸா புகைப்படங்கள் என இணையத்தை பல மணி நேரம் பார்த்தாகி விட்டது.... டி.வி பிடிக்கவில்லை.... தூங்கவும் பிடிக்கவில்லை...ஒரு வருடமாக எட்டிப்பார்க்காத என் கிறுக்கல் பக்கங்களில் இன்று கிறுக்கவைத்து விட்டான்.


Wednesday, December 24, 2008

நெஞ்சுக்கு நீ... தீ...

உலகின் மொழியில் எல்லாம் 
உச்சரிக்க முடியாதது
எனக்கு பரிச்சயமானது..... 
மௌனம்....  

ஓராயிரம் எண்ணங்கள் உளத்தில் எழுந்தாலும், 
மூளைகளின் நரம்பு துடிப்பு உடலில் உணர்ந்தாலும், 
இதயத்தின் இயக்க வேகம், இயல்பை விட அதிர்ந்தாலும், 
வெளிவரும் மூச்சில், வெப்பம் இயைந்தே போனாலும்.....  

பழகிய தாய்மொழியில் வார்த்தைக்கு பஞ்சமில்லை. 
உணர்வுகள் மோதுகையில், உதடுகளுக்கு ஒலியில்லை... 
காதல் என்றுதான் இல்லை, கோபம், வெறுமை, இனிமை,  
என பல நிலைகளிலும் நான் ஊமையாகி போகிறேன்...  

ஆனால், நீ.... 
நான் மௌனத்தில் இருந்தாலும், 
என் மனதின் சலனம் எல்லாம், எப்படி அறிந்தாய்?  

என் மன நிலைக்கு ஏற்ப,  
புன்னகைக்கவோ, பரிகாசிக்கவோ, 
பக்கத்தில் அமர்ந்து, கரம் பிடித்து தேற்றவோ, 
துக்கம் ஏற்பட்டால் தூர துரத்தவோ, எப்படி நீ அறிந்தாய்?.  

மௌனத்தில் அமைதியில்லை என, 
மௌனமாய் கற்றுத்தந்தாய்... 
இயல்பின் நான் திரும்பும்போது.. நீ 
இங்கில்லை... எங்கே சென்றாய்?

Tuesday, September 30, 2008

டபுள் மீனிங்....

இருப்பது போல் இருந்தாலும்,
இல்லையோ என ஐயம் தரும்
மறுப்பது போல் முயன்றாலும்,
இருக்கிறதென ஐயம் தரும்

நினைவில் தரும் உவகை
நித்தம் நினைக்க தவிக்கும்,
வினை மாற, கவலை
பித்தம் பிடிக்க வைக்கும்.

அறிதலும், புரிதலும்,
அருகிலும் வாய்க்காமல்,
அறிவினால் சிந்தித்தால்,
அபத்தாமாய் சிரிக்கவைக்கும்...

புரியாது என்றாலும்,
புவி முழுதும் ஈர்க்கவைக்கும்,
காதலும் கடவுளும்,
கவி எழுத வைத்திடும்.

Thursday, September 25, 2008

2008 முடிய இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்!

அவன் பேச்சும், புன்னகையும்,
மென் விரல்கள் தீண்டுதலும்,
நெற்றியில் முட்டுவதும்,
ஈரமுத்தம் வார்ப்பதிலும்...

ஹை ஃபெவ் அடித்து,
ஹக் செய்த காலங்களும்.
ஐஸ் க்ரீமும், இனிப்புகளும்,
உன் கண்ணில் காட்டும் உவகையும்,

என்னை போல நடனம் ஆடி,
இயல்பில் சிரிக்கும் சிரிப்பையும்,
உன்னை பிரிந்து வெளியே சென்றால்
உடன் நான் வரவா என்ற குழைவும்

இன்னும் மூன்று மாதங்கள்...
மிகத்தொலைவில் இருக்கிறது...

காலம் என்றுமே இப்படித்தான்
நீடிக்க விரும்பும் போது,
நிமிடமாய் நெகிழ்விக்கும்....
விரைவாய் விரும்பும் போது
மெதுவாய் பயணிக்கும்.

Wednesday, September 10, 2008

ஒவ்வொரு விநாடியும்

எதற்கென புரியாமல்,
ஏனென்ற தெளிவில்லாமல்,
ஏதோ ஒன்றை நோக்கி,
எழுகின்றேன்... விழுகின்றேன்...

வீட்டுக்கடன், வரவு செலவு,
வருமான வரி, வராத கடன்,
காசோலை, போன வழி வந்ததால்,
தேவையில்லாமல் அழிந்த ரூபாய் ஆயிரம்.
வணிக சந்தை எப்போது உயரும்,
விட்ட பணத்தை எடுக்க வேண்டும்.
நான் முதலீடு செய்யும் போது மட்டும்,
ஏன் பொருளாதாரம் நடுங்க வேண்டும்?..

காலிங் கார்டு செலவு மட்டும் மாதம் 40 டாலரா?
காபி குடித்த செலவு மட்டும் 50 டாலரா?
வால்மார்ட்டில் வாங்கலாமா? சாம்ஸில் வாங்கலாமா?
44 களில் பணம் இருக்குமா? இன்னும் உயருமா?

எதிர்பார்த்த லாபம் இல்லாததால்
சம்பள உயர்வு குறைவாகத்தான் இருக்குமாம்....
என்னுடைய உழைப்பிற்கு மணி நேரத்திற்கு 70 டாலர் வாங்கி கொண்டுதானே இருக்கிறார்கள்!

சென்னைக்கு செல்ல வேண்டும்..
இட்லி சாம்பார் சாப்பிட்டு எத்தனை மாதங்கள் ஆனது,
வேக வைத்த பருப்பை பார்த்தால் ஏனோ கோபம் வருகிறது....
மாத வருமானம் பாதியாய் குறையுமே!
பரவாயில்லை... வேண்டாம்.....
பருப்பு வேண்டாமென்றால், பர்கர் இருக்கிறது....

செலவு கணக்கு பார்க்காத நான் சில நேரம்
சில்லரை கணக்கு பார்க்கும் போது....
ஒவ்வொரு விநாடியும் என்னை தொலைத்து....

Thursday, July 24, 2008

பழங்கதைகள் நினைத்து... .

பொய்யான புன்னகை முகமூடி,
தன்னிலை குறித்தே எப்போதும் சிந்தனை...
வேலை வந்தாலும், செலவு வந்தாலும்,
அடுத்தவரிடம் காட்டும் தனி அன்பு...
தேவையில்லாமல் கொடுப்பவன் ஏமாளி எனும் அடைமொழி...
வாழ்விற்கும் புன்னகைக்கும் தொடர்பொன்றும் இல்லை.. .
அது டாலர் மதிப்பிலேயே இருக்கிறது என்ற வாக்குவாதங்கள்....

பணிபுரிவதிலும் பாங்காக அரசியல்,
அப்ரெயிசல் என்ற பெயரில் அழுக்கு பொய்கள்...
முன்னே புன்னகைத்து, நகர்ந்த பின்னர் பரிகாசம்...
பரிகாசம் செய்தியாக உடனுக்குடன் பரிமாற்றம்...

இந்த கூட்டம் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை....
இதை நான் இயல்பென்று ஏற்க விரும்பவில்லை...

பழைய நட்புகள் மீண்டும் கிடைக்குமா?

பல் தெரிய பெரும் சிரிப்பு,
கைக்குட்டையில் காசு சேர்த்து,
ஐயங்கார் பேக்கரியில் கூட்டுறவு சிற்றுண்டி
சமோசாவை கூட காக்கா கடி கடித்த அழகு

முணியாண்டி விலாசில் மலிவு விலை பரோட்டாக்கள்...
புறநகர் இரயில் - மூன்று இருக்கையில், ஆறு பேர்..
கரம் பிடிக்கும் கட்டை தொங்கி,
டார்சன் கருத்துவிளக்கம்...

மதிய கட்டுச்சோறு 10 மணிக்கே மாயமாகும்.
பகல் சாப்பாடு, ஆந்திரா மெஸ்ஸில்,
கோங்குரா.. சாம்பார், சாம்பார், சாம்பார், மோர்.. இன்னொரு சாம்பார் என சிரிப்பினூடே வைத்துக்கொண்ட சாப்பாட்டு பந்தயங்கள்...

ஆய்வு அட்டவணை (records) அனைத்தும் நீ முன்னே முடித்தாலும்,
நான் முடித்த பின் கையெழுத்து வாங்கும், நட்பிற்கான இங்கிதம்...
மூன்று மணிநேர தேர்வை ஒரு மணி நேரத்தில் முடித்த பின்னும், எம்முடன் பயணிக்க நீ காத்திருந்த காரணம்...

கல் எடுத்து குறிபார்த்து எரிய, நிசப்தம் ஆகும் சுவற்றுக்கோழிகள்...
நான் அடித்த கல் அவற்றை அடக்கவில்லை என்றால்...
இன்னொரு ரவுண்ட் ட்ரை பண்ண சொல்லும் அன்பு

1 ரூபாய் நாணயம் வைத்து கந்தமாகுமா என ஆராய்ச்சி செய்து,
பல நாணயங்களை தண்டவாளத்தில் தற்கொலை செய்யவைத்த நாட்கள்...
கந்தகமாகவில்லை என அறிந்தும்,
அது metal alloy, இப்போது இருபது பைசாக்களை ஆராய்வோம் என
வரிசையாய் அடுக்கிவைத்து அறிவு வளர்த்த நாட்கள்

உள்ளத்தில் உள்ளதை உள்ளவாறே உளறி,
உவகை பூத்த காலங்கள்....

எதிர்பார்ப்பு எதுவுமின்றி, இயல்பாய் பழக,
இதயத்தில் எப்போதாவது கனமிருந்தால் இறக்கி வைக்க...
இரைச்சலின் அமைதியை கொலை செய்து, சில வார்த்தை இனிமை பேச,
யாராவது உடனே வேண்டும்... நான் நானாக வேண்டும்...

Monday, July 21, 2008

விஞ்ஞானம்

விஞ்ஞானம்... ஒவ்வொரு நொடியும் வியக்க வைக்கும்...

கடந்த பொருட்களை சுட்டிக் காட்டி...
விஞ்சிடும் அளவில் வியப்புண்டாக்கி...

இதோ இது பால் வெளி... .அண்டம் முழுவதும் கோள்கள்...
அந்த கோளில், ஆயிரம் ஒளி ஆண்டு அருகில்...,
அதோ ஒரு மேடு.... இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் இங்கு புதிய உயிர் பிறக்கும்...
இந்த சந்திரன் மேலே கட்டிடம் அமைப்போம், சாத்தியம் உண்டு....

ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு
ஒலியில் வேகத்தில் பயணிக்க...
உடைகள், உணவுகள், உறைவிடம்,
உள்ளது சிறக்க, உவகை பெருக்க....

மாற்றங்களை மாறாமல் செய்வதால்,
மாபெரும் சக்தியானாய்...
ஏற்றங்கள் பல தந்தாய், தருவாய்,
மேலும் தருவாய்...

மனிதர்கள் நாங்கள்...
அப்படியே ஏற்றக்கொண்டால்,
மரபணுக்கள் கேலி செய்யும்.
குறைகள் பார்ப்பது எங்கள் குலவழக்கம்....

பாலி-எதிலின் வந்தால், சுற்றுச்சூழல் பற்றி சிந்திப்போம்...
மரத்தை காக்க மாற்று வந்தால், பழமை போனது என்று பரிதவிப்போம்...
மரபணு மாற்றி புதிய பயிர் வந்தால்,
வழி வழி பயிரை மாய்த்தாய் என்போம்..
உவற் நீரிலும், உலர்ந்த காட்டிலும்
பயிர் விளைவிக்காத அறிவியல் ஏனென்போம்...

நன்றாய் நாங்கள் இருக்கும் வரை...
மருத்துவ அறிவியல் காசு பார்க்க என்போம்..
மென்பொருள் படித்த ஒவ்வொரு மனிதனும்,
சமுதாய உழைப்பை சுரண்டும் காட்டுமிராண்டி என்போம்..

அணு சக்தி, எரிபொருள். வான்வெளி, கோள்வழி,
பங்கு சந்தை, உலக அரசியல், மரபணு, தொழில் நுட்பம்,
தகவல் தொடர்பு, மேலாண்மை, எல்லாமும் எனக்கே தெரியும்...

நாங்கள் கேள்விகளை கேட்கவும், எதிர்ப்புகளை தெரிவிக்கவும்,
எந்த ஒரு கட்டுப்பாடும் எப்போதும் கொண்டதில்லை...

நாளை வளமாகும், உலகின் குறைபாடுகளுக்கு,
ஒரே தீர்வாக எப்போதும் விஞ்ஞானம் காத்திருக்கும்..
அதற்கு வியாபாரமோ, மனித நேயமோ, அரசியலோ,
எது வேண்டுமானாலும் காரணியாக இருக்கலாம்...

நாங்கள் மாறமாட்டோம்...
நலன்களை எல்லாம், நன்றாய் நுகர்ந்தாலும்,
எது வந்தாலும் எதிர் குரலெழுப்புவோம்...

Sunday, June 15, 2008

தந்தையர் தினம்

இன்று தந்தையர் தினம்....


தொழிலாளர் தினம், காதலர் தினம், எத்தனை தினங்கள்...
எங்கிருந்து முளைத்தன இந்த புதிய நாட்கள்?
யார் கொண்டு வந்தனர், யாவருக்காக?
வாணிப ரீதியில் வளம் சேர்க்கவோ,
வரண்டிடும் மனங்களில் ஈரம் சேர்க்கவோ?

எண்ணிரண்டு வருடம் முன்னே இவை ஏதும் பிடிக்கவில்லை...
அன்பினை வெளிப்படுத்த நாள் ஒன்று தேவையில்லை...
ஒவ்வொரு நொடியும் தானே துலங்கிடும்...
அதற்கு வாழ்த்து அட்டையோ, வண்ணப் பூக்களோ அவசியமில்லை...
என்று நான் நினைத்திருந்தேன்.... அப்போது அனைவரும் அருகில்


இன்று நான் தனிமையில்,
வடிகட்டிய வார்த்தைகள்...
இயல்பை இழந்த நடைமுறைகள்...
சூழலுக்கேற்ற வழிமுறைகள்....
என்னை இழந்து நான்...

உரக்க பேசவோ, உணர்வை கொட்டவோ
வடிகால் இல்லாத, வரம்புக்குட்பட்ட,
பழைய சுவடுகளால், பண்பட்ட
என்னை இழந்த நான்...

தந்தை நினைவுகளில்..
தந்தையான நான் நினைவுகளில்...

என் இளமை காலத்தில்,

எவர்க்ரீன் சூப்பர் ஹீரோ...
என் தந்தை..
கைகளை மடக்கும் போது, எட்டிப்பார்க்கும் தசை முட்டை ...
தொட்டுபார்த்து மகிழ்ந்த நினைவு.

எங்களை எண்ணையில் மூழ்கித்து,
ஜெயன்ட் ரோபாட் என தலை மீது தூக்கிய நினைவு.

அவ்வப்போது, பக்கத்து தெரு பகோடா வாங்கிவந்து,
சுவையான பால் சாதத்தை, அறுசுவையாக்கிய நினைவு...

ராஜ்டூட் பைக் டாங்கின் மேல் உட்கார்ந்து,
அப்பா பார்வை மறைக்காமல்,
கழுத்தை சாய்த்து உட்கார்ந்தும்,
காற்றின் வேகத்தை கண்ணில் வாங்கிய நினைவு...

மிதிவண்டி கற்றுதர போரூர் ஊர் சென்று,
1 ரூபாய் வாடகை சைக்கிள் ஏறி,
செம்மண் புழுதி வாரிய நினைவு...

வாக்கிங் என்ற பெயரில்,
சற்றே தூரம் நடந்து,
சுவையாக தேநீரும், பட்டர் பிஸ்கெட்டும்,
இரசித்து பருகிய பின்..
சலைக்காமல் பல பேசி...
இளைத்த காலை பொழுதுகள்....

......

அரும்பிய மீசை....
அதிகரித்த குறும்பு,
குறைந்த மதிப்பெண்,
அறையப்பட்ட அடிகள்...

காலை மடக்கி சுவற்றின் ஓரம்,
நாற்காலி நிலையில் நிற்க சொன்னாலும்,
நான்கு எண்ணுவதற்குள் முடியாது என்று,
முறைத்து, முணுகி,
உதை வாங்கிய நாட்கள்....

சும்மா ஒன்னும் அடிக்கவில்லை...
ஒழுங்காக படிக்கவில்லை...
இந்த கணக்கு பாடமும் கடவுள் போலத்தான்...
எந்த நிலையிலும் ஏதும் விளங்கவில்லை...

.................

ஐந்து ரூபாய் தந்தாலும்,
ஏன் எதற்கு கேள்விகள்...
நேரு சொன்னாராம்... நம்பினால் கேள்வியில்லை.. நம்பாவிட்டால் பதிலில்லை என்று...
நான் சொல்லியிருந்தால், இடையணியும் பெல்ட் கையேந்தப்பட்டிருக்கும்...
கோபக்கார அப்பா..... ஆனாலும் பிடிக்கும்....

.....

அவர் கண்கள் நீர் தளும்பி சில முறை நான் பார்த்ததுண்டு...
பல நேரங்களில் நானே அதன் காரணம்...

ஐ. ஏ. எஸ் ஆகனும்.. எஞ்சீனியர் ஆகனும்...
என்றெல்லாம் வளர்த்தாலும்...
என்ன செய்ய... என்னுடைய சோம்பேறி தனத்திற்கு,
கிடைத்தது பேமன்ட் சீட்தான்....
ஆனால் நல்ல விஷயம்.. நானும் எஞ்சீனியரானேன்...

அத்தனை மோசமில்லை... ஏதோ நானும் வளர்ந்துவிட்டேன்...
முடிந்தவரை முயற்சிக்கிறேன்... வாழ்கிறேன்...
லைட்ஹவுஸ் வெளிச்சம் காட்டி செல்லுவது போல..
அப்பா முகத்தில் வெகுசில முறை புன்னகையை, பெருமிதத்தை
என்னாலும் உண்டாக்க முடிந்தது....

இதோ வழித்தோன்றல்...
அப்பாவிடம் வாங்கிய அடிகள் விட இவனிடம் இதுவரையுமே நிறைய வாங்கியுள்ளேன்...

அவன் அடம் பிடிக்கும் போது, நான் அதட்டினால், அப்பாவில் முகத்தில்தான் எத்தனை புன்னகை!



ஹேப்பி ஃபாதர்ஸ் டே...

Saturday, June 14, 2008

Past, Present and Unseen

Weekend begins...
and heights of laziness....
but bored...

Started a phunny game... to build a poem...

The alternate colors of conversation between me and Aki dude...


One big roar at the chime of school bell ring
None can stop us flying with a wing..
Winsome smile  through ups and downs...
With friends around walking side to side....

Falling and rising at each path,
Dreaming and aiming with each breathe,
Somehow the childhood got its wing,
And the bubbly teen came with swing


Ooooh… All of the sudden..
The other gender is always bright…
Adrenalin is working right….
Fall in Love and every day is a flight

Garden, parks and private cafeterias,
Are all discoveries of modern Columbus,
Lengthy hours of togetherness,
Could never satisfy the blooming heart
.

The lengthy drive with swifts and curves…
Many a crushes and bumps and breaks…
The course is long, the purpose is baffling
I know… ah no… not pretty sure..

Adolescent brings a permanent pause,
Responsibility prevents the reverse thoughts,
There is often joy without laughter,
We realize there is more in the platter


Moving on… asset creation, movable and immovable,
Rowing on… rough white water falls…
You can’t hear.. You can’t speak…
All you can do is to row it hard….

The destination isn’t that far…
Wish i knew, it's just for fun…
But still you are determined, to prove…
Straining the muscle and pumping each vein….

Memory fades with passing days,
There is no fun in any play,
There is no race to win,
But an ardent urges to move ahead.

Reality is never realized,
And nothing seems to be bright,
At each point we recall the childhood,
With each thought we cherish our lovely moments,


I realize that  life is not too long….
But it is something like a  beautiful song..
Why to worry about what happens at the end.
When you have the entire world by you to spend…

At the end of the glory game,
The king and pawn may be just the same.
But while game is being played..
Every piece is so famed..

You are special… for what You are…

Tuesday, June 10, 2008

நன்றி கவிஞர்களுக்கு

ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை

கலக்கிடாருயா கலக்கிடாருயா………………….

அவர் எழுத்துக்களை பார்த்து அவர் நினைவில் இன்றைய கிறுக்கல். ………………….பிழை பொறுக்கவும்.

வைரமுத்து.... சற்றே காசுக்காக ஆசு பாடியிருந்தாலும்,
கற்பனைக்காகவும், கவிதைக்காவும் கணை தொடுத்தவர்தாம்..
இவர் பாரதியையும், வள்ளுவரையும், சங்க பாடலையும்
நம்மவர் வாயில் வரச்செய்தவர்...

ஆம்பலும், மொவ்வலும், நமக்கு தெரியாமலே போயிருக்கும்...
குனித்த புருவம் .. அப்பாடல் மறந்து போயிருக்கும்..
தனித்தமிழ் உச்சரிப்பு, விவேக் நகைச்சுவை மட்டுமே என்று
இனி வரும் எதிர்காலம் நினைத்திருக்ககூடும்.

நன்றி கவிஞர்களுக்கு, இவர்கள் கவலைகளை மட்டும் அல்ல, காலத்தையும் வென்றவர்கள்..

Friday, June 6, 2008

புன்னகை

மெல்லிய பசுமை குடில்,
தினம் மென்மையாக தெளிக்கப்படும் தண்ணீர்
ஊட்டங்கள் சேர்த்திட உரங்கள்
காய்ந்த இலைகளையும் கத்தரிக்க விரல்கள்..
மொட்டு விட்டு மலரும் வரை இரசித்திட சில விழிகள்...

இவை எதுவுமே நான் அறியவில்லை...
எனது மெல்லிய மலர்களை யாரும் விரும்பவில்லை..
வேலிகாத்தான்... முட்களை ஏந்தி நான்.....

மண் வாசனை தெரிந்த மண்ணிலும் கூட
எருமை மாடு கட்டவும், எரி பொருளாகவும்,
செலவில்லாத சுவராகவும் மட்டுமே வாழ்ந்த நான்....

என்ன வாழ்க்கை இது என்று ஆக்சிஜனை அள்ளி வீசியபோது,

எனதருகே இது வரை வாழ்ந்து,
மாடுகளின் குளம்புகளில், நசுங்கி வீழ்ந்த
சின்ன செடியொன்று சொன்னது...

அண்ணா.... உங்களை போல் பிறந்திருக்க வேண்டும்....

புன்னகைத்தேன்... என் வாழ்க்கை மோசமில்லை...