Wednesday, December 24, 2008

நெஞ்சுக்கு நீ... தீ...

உலகின் மொழியில் எல்லாம் 
உச்சரிக்க முடியாதது
எனக்கு பரிச்சயமானது..... 
மௌனம்....  

ஓராயிரம் எண்ணங்கள் உளத்தில் எழுந்தாலும், 
மூளைகளின் நரம்பு துடிப்பு உடலில் உணர்ந்தாலும், 
இதயத்தின் இயக்க வேகம், இயல்பை விட அதிர்ந்தாலும், 
வெளிவரும் மூச்சில், வெப்பம் இயைந்தே போனாலும்.....  

பழகிய தாய்மொழியில் வார்த்தைக்கு பஞ்சமில்லை. 
உணர்வுகள் மோதுகையில், உதடுகளுக்கு ஒலியில்லை... 
காதல் என்றுதான் இல்லை, கோபம், வெறுமை, இனிமை,  
என பல நிலைகளிலும் நான் ஊமையாகி போகிறேன்...  

ஆனால், நீ.... 
நான் மௌனத்தில் இருந்தாலும், 
என் மனதின் சலனம் எல்லாம், எப்படி அறிந்தாய்?  

என் மன நிலைக்கு ஏற்ப,  
புன்னகைக்கவோ, பரிகாசிக்கவோ, 
பக்கத்தில் அமர்ந்து, கரம் பிடித்து தேற்றவோ, 
துக்கம் ஏற்பட்டால் தூர துரத்தவோ, எப்படி நீ அறிந்தாய்?.  

மௌனத்தில் அமைதியில்லை என, 
மௌனமாய் கற்றுத்தந்தாய்... 
இயல்பின் நான் திரும்பும்போது.. நீ 
இங்கில்லை... எங்கே சென்றாய்?

2 comments:

பழமைபேசி said...

//எங்கே சென்றாய்?//

உங்களை விட்டு எங்கும் சென்று விடவில்லை. மெளனம் மெளனமாகிவிட்டது!

Anonymous said...

Good One Dude.
Enna Ore Peelingsa ???