Tuesday, November 20, 2018

ஆண்கள் தினம்...


ஆண்கள் தினம் இன்றென இணையத்தில் கண்டேன்
ஏன் இது எனவே நானும் எண்ணியிருந்தேன்..
எத்தனை வியப்பு,  எதிர்பார்க்கவே இல்லை நான்...

33% விழுக்காடு எமக்கு தர, நீ யார்? உம் இனத்தை கண்டால்
வாழ்த்த கூட வாய் வரவில்லை என்றார் ஒருவர்.
பெண்தினம் கொண்டாட காரணம் இருந்து, சரித்திரம் இருந்து,
பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து அது சர்வதேச நிகழ்வு
உனக்கென்ன காரணம்? என்றார் ஒருவர்,

பல பதிவுகளும், கேட்ட பதில்களும், பார்த்த விழிகளும்,
பொது புத்தியை மட்டுமே பறை சாற்றியது...
பாவம் பெண்கள்... ஆண்களுக்கென்ன?

எம் தோழர்களுக்கு 498A என்றாளோ,
காதல் முறிந்த பெண்ணோ, பெற்றோரோ.. வாரி பூசிய வன்புனர்வு வழுக்குகளோ,
வரதட்சணை என்ற பெயரின் வழக்கால், அழிந்த குடும்பமோ...
காசுக்காக மட்டுமே, மணம் முடித்த, விவாக இரத்துக்காய்,
விதியிழந்த தோழரையோ, அறிந்திருக்க முடியாது.

இங்கு காமம் வணிகமாய் மாறிய காரணம்,
வணிகம் கவர்ச்சியால் வளம் பெற்ற காரணம்,
எப்பாலும் தவறுகள் இழைத்திட காரணம்,
எல்லாமும்.. ஆண்கள் என பிழைபட்ட கூற்றுகள்..

ஆய்ந்து, அறிந்து, தேர்ந்து, தெளிந்து,
அறிவு செறிந்த நேரம் போம்,
இன்று செவி செய்தி கேட்டு, உறுதி பேசி
கேட்பார் குழந்தையாகினோம்..

திருநங்கையருக்கு நாம் நாளெடுத்த காலத்தும் முகப்புத்தகத்தில்,
வானவில் ஏந்தி, வாழ்த்து சொன்ன தோழர் கூட
ஆண்களுக்கு ஆதரவாய் இருந்ததில்லை.

அன்பு தோழரே...
உமது அங்கீகாரத்திர்காய் யாம் என்றும் இருந்ததில்லை...
வலிகளும், வடுக்களும் என்றும் புதிதில்லை...
எம்மிலும், வலுவிழிந்தோர் உண்டு,
அறிவிலி சட்டங்களால் அவலம் உறுவோர் உண்டு...

இங்கு இதயநோயும், மனநோயும் ஆண்களுக்கே அதிகம் உண்டு,
நாங்கள், உறுதி அதிகம் கொண்ட, ஊமையர்கள்,
நாங்கள் அழவோ, புலம்பவோ, வருத்தம் காட்டவோ
பழகவில்லை, அதை காட்ட ஒரு துணையும் இல்லை...

எல்லா சமுதாயத்தும், எல்லோரும், எப்போதும், உண்டு,
கயமை உள்ளவாரே கல்வியாலர் உள்ளார்,
புல்லர், உள்ளவாரே புலவரும் உள்ளார்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பு வினையெச்சமே

நாம் காலச்சுவடுகள் காலத்தாலே பண்பட்டவை...
ஒவ்வொரு நிகழ்வின் பின், ஒரு நியாயமும், காரணியும்,

இந்த நாட்கள் எங்கு வந்தது?  வணிகமோ? அரசியலா?
ஆண் தினம் கொண்டாடப்படாது...
வாட்ஸ்பம் வேடிக்கையாய் மறைந்துவிடும்.
எந்த ஆணும் அதை விரும்பவும் மாட்டான்.

எதிர் மறை கருத்துகள், என்றும் புரிதல் தரும்,
ஆயின், , இன்று புரிந்தது எல்லாம் வலித்தது..

அடையாளம் இல்லாத ஆண்மையே... 
உடல் வலிவு கொள்...
உளம் செறிவு கொள்..
அறத்திமிர் கொள்..

சமுத்திர காற்றாய், விரித்திடு உன் வட்டத்தை,
நீ உயிர் கொடுத்து காக்கும் மனையும், குழவியும்,
உயிர் கொடுத்து வளர்த்த தந்தையும் தாயும் கூட
உன் மனம் அறியும் காலம், ஒருக்காலும், இல்லை...

உமக்கு இரங்க இச்சமுதாயம் வெட்கம் கொள்ளும்,
உனை பரிகாசிக்கும், குறை சொல்லும்,

வலியை வலியாய் மாற்று,
அடையாளம் உணக்கு வேண்டாம்
அன்பே பொழி...
உன்னுள் அமைதி கொள்...

Friday, November 16, 2018

அப்பப்பா அப்பா


சிங்கார சென்னையின் சித்திரை வெயிலே...
கோலோச்சும் தலைவ, கோபத்தின் புயலே..
வள்ளுவம், சைவம் வாய்த்தமைந்த நிலையே,
பவள விழா, பதிற்றுப்பத்தாய் சிறக்க எம் விழைவே

சிவந்த விழி, துடிக்கும் உடல், மிடுக்கு நடை அழகே,
தெறிக்கும் குரல், அடிக்கும் அடி, பின் அணைக்கும் நகை உமதே.
வலிக்கும் அன்பு, இனிக்கும் பலா, மறுப்புமக்கு இலையே,
களிக்கும் நிலை, கவலை நிலை, கடந்த நிலை உமதே..

அரச நிலை, ஆடல் பாடல், அலுத்து விட இலையே,
புலவர் பலர், புரவலர் நீர், சரித்திரங்கள் நுமதே
அடுத்த வேளை பசி முன்னர், அமுது தரும் துணையே,
வாழ்வெனில் உம்போல் வாழ வரம் பெற்றீர், நலமே

கணக்கிலா செல்வம், கணக்கெடுத்து காத்தீர்,
உணர்வினை உரைத்திடினும், பிணக்கிலாது வாழ்ந்தீர்,
தனக்கிலா தனை கண்டு தளிர் நடை மீண்டும் கொண்டீர்
இணையாலா என் ஈசன், எந்தையாக கண்டேன்...