Wednesday, August 15, 2018

சுதந்திரம்


சுதந்திரம்,

தேசிய கீதம் பாடும் போது, ஊசி முனையாகும் உடல் உரோமம்,
தேசிய கொடியினை காணும் போது, தேக்கிய நீராகும் கண்கள்,
இரகுமான் இசையின் நம் இந்தியா அது ஒன்றுதான்  என கேட்கும் போது
வெடிக்க துடிக்கும் இதயம், நானும் இந்தியன் ...

ஒரே உலகினை துண்டு துண்டாக்கி,
இயற்கை எதிராய் எல்லைகள் வரைந்து,
இது எனது, அது உனது என வரப்பு அமைத்து,
மக்களை காப்பது ஒரு நிலைப்பாடு.

நாடா வளத்த நாடுகள் இருந்தால்,
நமதாக்கி விட்டால்,  நலம் என்பதால்,
எண்ணையும், இயற்க்கையும் உள்ள நாடுகள்,
எதிரி நாடாய் மாறிய நிலைப்பாடு,

நல்லை ஆடவர், நல்லை நாடிருந்தால்,
மண்ணையும், மாண்பையும், மொழியையும் காப்பர் எண்பதால்,
மாண்பையும், மொழியும் மக்க அழித்து பின்
மண்ணை மட்டும் தமதாக்க ஒரு நிலைப்பாடு,

குடி உயர, கோன் உயரும், 
இக்குலம் அழிந்து, இங்கொரு கோன் வாழ்வான், ஏனென்றால்
பொருளாதார புரிதல் இல்லையென,
புல்லறிவு பேசும், ஒரு நிலைப்பாடு

இயற்கையின் மாண்பு,
வலியவர் வாழ்தலும், எளியவர் வீழ்தலும்
மனிதத்தின் மாண்பு,
சுற்றமும், நட்பும், சமூகமும் சிறத்தல்

இன்று, நீருக்கும், காற்றுக்கும், கடலுக்கும்,
சோற்றுக்கும், வேலைக்கும், உழலும் என் மக்கள்,
வாழும் மண்ணில் மாற்றார் ஆவர்,
அப்போது, நாம் உலக மக்கள் என வரும் ஒரு நிலைப்பாடு.

இலங்கை, சிரியா, நைஜீரியா, திபெத்து,
ஹாங்காங், மியன்மார், க்யூபா, சோமாலியா,
தன் நாடென்றவர் இன்று, உலகையே நாடாக்கினர்.
வரவேற்பு சிறிதெனினும், வாழ புலம் பெயர்ந்தார்.

காலத்தின் மாற்றத்தில் காட்சிகள் மாறும்,
மன்னனோ, (பிரதம) மந்திரியோ, மாறலாம்,
மக்கள் மாண்பு சிறந்தால் அது  நாடு.
மனிதம் திண்டாடினால், இடுகாடு

நண்பா விழித்தெழு, நலமும்,
வளமும், நுட்பமும், திறனும் இருந்தாலே,
நாளை உன் வாழ்வின் வெளிச்சம் இருக்கும்,

இந்த நாடு, நீயும் நானும்,
நாடு உயர்தினை ஆனது, உன் உயிர்மையால்,
நாட்டிற்கு வாழ்த்து சொல்ல,
நாம் தயாராவோம்,

நண்பா... உனக்கு இன்று, உரக்க சொல்...
நீ சுதந்திரன்,

பிறர் வாழ்வில் வளம் சேர்க்க, மகிழ்விக்க,
மண்ணையும், வளத்தையும், மாண்மையும் காக்க ,
நம் கல்வியும், வித்தையும் தலைமுறை தாண்ட,
காவியம், காப்பியம், சரித்திரம் படைக்க,

நீ சுதந்திரன்.. சுதந்திர நினைவில் வாழ்த்துகள்.

வலி


வலி,
எனது வாழ்வினில்,  விதை நீயே... வளர்ந்தாயே
வலி,
எனது நனவிலும், கனவிலும் நீயே... நிறைந்தாயே...
வலி,
அன்பு கொண்ட உள்ளம், என்னை அகன்று சென்ற போதிலும்,
அறிவும், உழைப்பும் இருந்தும், என்னை ஆக்கம் நீங்கி போதிலும்,
எனது செறுக்கினை, முறுக்கினை காலம் கொன்ற போதிலும்,
எனது கனவினை, உயிர்ப்பினை, நாளும் நனவு மாற்றும் போதிலும்,
வலி...
என் சிந்தையும், சீற்றமும், சொல்ல வார்த்தை பொய்த்ததும்,
பெற்ற சுற்றம், நட்பு, எனது அன்பின்  பொய்த்து போனதும்,
என் கடவுளும், தவமும் இன்று கருத்து மாறி காய்ந்ததும்,
என் கவிதை, தாளும் கோலும் இன்றி கரைந்து போன காலமும்
வலி...
எனது வடுக்கள், எனது வருத்தம்,  தரும் வலிகள் , அது கனக்கும்,
கால சுவடு , வாழ்வின் சருக்கம், என்னை உய்க்கும், அரவணைக்கும்,
வலி...
வாழ்வின் இலக்கணம், காலத் திருத்தம், ஊக்கம் விளைக்கும், இது நிலைக்கும்
எனது களிப்பு, கவலை  பிறக்கும் விளிம்பின் வரும் விருத்தம்,

வலி....
உடைந்த உள்ளம் உறுதி கூட்டும்; நிறைந்த தெளிவு அறிந்து நாடும்,
தளர்ந்த உள்ளம், திறனை கொள்ளும்; தகர்ந்த கனவு நனவில் வாழும்,
உலர்ந்த இதயம், தெளியும், மலரும்; உவப்பர் எண்ணம் உவகை கூடும்,
கடந்த காலம் கல்வி கூறும்; வலிகள் வாழ்வின் வளமை காட்டும்
வலி....