Wednesday, August 15, 2018

வலி


வலி,
எனது வாழ்வினில்,  விதை நீயே... வளர்ந்தாயே
வலி,
எனது நனவிலும், கனவிலும் நீயே... நிறைந்தாயே...
வலி,
அன்பு கொண்ட உள்ளம், என்னை அகன்று சென்ற போதிலும்,
அறிவும், உழைப்பும் இருந்தும், என்னை ஆக்கம் நீங்கி போதிலும்,
எனது செறுக்கினை, முறுக்கினை காலம் கொன்ற போதிலும்,
எனது கனவினை, உயிர்ப்பினை, நாளும் நனவு மாற்றும் போதிலும்,
வலி...
என் சிந்தையும், சீற்றமும், சொல்ல வார்த்தை பொய்த்ததும்,
பெற்ற சுற்றம், நட்பு, எனது அன்பின்  பொய்த்து போனதும்,
என் கடவுளும், தவமும் இன்று கருத்து மாறி காய்ந்ததும்,
என் கவிதை, தாளும் கோலும் இன்றி கரைந்து போன காலமும்
வலி...
எனது வடுக்கள், எனது வருத்தம்,  தரும் வலிகள் , அது கனக்கும்,
கால சுவடு , வாழ்வின் சருக்கம், என்னை உய்க்கும், அரவணைக்கும்,
வலி...
வாழ்வின் இலக்கணம், காலத் திருத்தம், ஊக்கம் விளைக்கும், இது நிலைக்கும்
எனது களிப்பு, கவலை  பிறக்கும் விளிம்பின் வரும் விருத்தம்,

வலி....
உடைந்த உள்ளம் உறுதி கூட்டும்; நிறைந்த தெளிவு அறிந்து நாடும்,
தளர்ந்த உள்ளம், திறனை கொள்ளும்; தகர்ந்த கனவு நனவில் வாழும்,
உலர்ந்த இதயம், தெளியும், மலரும்; உவப்பர் எண்ணம் உவகை கூடும்,
கடந்த காலம் கல்வி கூறும்; வலிகள் வாழ்வின் வளமை காட்டும்
வலி....

No comments: