Friday, November 16, 2018

அப்பப்பா அப்பா


சிங்கார சென்னையின் சித்திரை வெயிலே...
கோலோச்சும் தலைவ, கோபத்தின் புயலே..
வள்ளுவம், சைவம் வாய்த்தமைந்த நிலையே,
பவள விழா, பதிற்றுப்பத்தாய் சிறக்க எம் விழைவே

சிவந்த விழி, துடிக்கும் உடல், மிடுக்கு நடை அழகே,
தெறிக்கும் குரல், அடிக்கும் அடி, பின் அணைக்கும் நகை உமதே.
வலிக்கும் அன்பு, இனிக்கும் பலா, மறுப்புமக்கு இலையே,
களிக்கும் நிலை, கவலை நிலை, கடந்த நிலை உமதே..

அரச நிலை, ஆடல் பாடல், அலுத்து விட இலையே,
புலவர் பலர், புரவலர் நீர், சரித்திரங்கள் நுமதே
அடுத்த வேளை பசி முன்னர், அமுது தரும் துணையே,
வாழ்வெனில் உம்போல் வாழ வரம் பெற்றீர், நலமே

கணக்கிலா செல்வம், கணக்கெடுத்து காத்தீர்,
உணர்வினை உரைத்திடினும், பிணக்கிலாது வாழ்ந்தீர்,
தனக்கிலா தனை கண்டு தளிர் நடை மீண்டும் கொண்டீர்
இணையாலா என் ஈசன், எந்தையாக கண்டேன்...

No comments: