Wednesday, January 18, 2012

காதலினால் மானுடர்க்கு கவிதை தோன்றும்

உனை நினைக்கையில் என் இதயம் துடிப்பேறும்
நான் உண்மை சொல்வேன்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
நான் உரக்க சொல்வேன்

உன் சிரிப்பாலே என் இதழும் புன்னகைக்கும்
நான் என்றும் சொல்வேன்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்


இப்படி ஒரு காதல் என்றால்
எப்படி என யாரறிவார்
இதயம் வலிக்கும் இன்பம்
மெதுவாக சொன்னது பார்

அவள் நினைவின்றி என் வாழ்வில் நானில்லை
அவள் நினைவின்றி என் வாழ்வில் நானில்லை

உனை நினைக்கையில் என் இதயம் துடிப்பேறும்
நான் உண்மை சொல்வேன்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
நான் உரக்க சொல்வேன்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்


இருள் மாய்ந்து ஒளி வரும்போதும்
ஒளி தேய்ந்து இருள் வந்தாலும்,
ஒன்றேதான் என் ஆசை
என்னருகே நீதான் வேண்டும்

என் காதல் அது என்று கைகூடுமோ?
என் காதல் அது என்று கைகூடுமோ?

என் கனவினில் இனி வண்ணம் பல மாறும்
நான் உண்மை சொன்னேன்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
உன்மேல் ஆணை செய்வேன்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்


என் கனவிலும்
என் மூச்சிலும்
என் உயிரிலும்
உன் நினைவே நினைவே

அதி காலையும்
மதி இரவிலும்
விழி முழுவதும்
உன் முகமே முகமே


உனை நினைக்கையில் என் இதயம் துடிப்பேறும்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
உன் சிரிப்பாலே என் இதழும் புன்னகைக்கும்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்

உனை நினைக்கையில் என் இதயம் துடிப்பேறும்
உன் பெயரே எனது மூச்சாய் உள்ளேறும்
உன் சிரிப்பாலே என் இதழும் புன்னகைக்கும்
உன் விழியினில் என் வாழ்வின் ஒளியேறும்

No comments: