மெல்லிய மழை... மேகத்தின் ஊடே வெயில்,
தெள்ளிய நீர்நிலை... சிலிர்க்க தென்றல்,
வேகமாய் பயணத்தில் முகம் எதிர்க்கும் காற்று,
மட்டவிழ்ந்த மலர்கள், பறவைகளின் பாட்டு,
வட்ட முழுநிலா, வண்ணங்களில் மேகம்,
நெட்டயெழும் மரங்கள், நீலத்தில் வெறும் வானம்,
கிட்டே வந்து திரும்பியோடும் வெள்ளை நுரை கடலலைகள்
நட்ட நடு நசியில் கண் சிமிட்டும் தாரகைகள்...
எத்தனை முறையேனும் நான்
எண்ணியெண்ணி பார்த்தாலும்,
முத்தான உன் புன்னகைக்கு,
ஒப்புமையாய் ஏதுமில்லை..
1 month ago
 
1 comment:
manasa thodala intha kavithai.
Post a Comment