Wednesday, October 1, 2008

இன்று ஆணி ஏதுமில்லை

எனக்கு பிடித்தது....................
இயற்கை, கவிதை,
இயல்பின் புன்னகை,
மற்றும் உனக்கு பிடித்த அத்தனையும்



வான்வெளி விஞ்ஞானிகள்
வருத்தத்திற்குறியவர்கள்..
வெண்ணிலவு விண்ணில் இருக்குமென
கலன் ஏறி பயணிக்கிறார்கள்.
அவர்கள் அறியமாட்டார்கள்..
கண்ணில் நிலவேற்றிய பெண்களை



கவிதை எழுதிய
சட்டை வாங்கத்தான் கடை சென்றேன்..
உன் பெயர் தெரியாததால்
சரியான கவிதையை தேர்ந்தெடுக்க முடியவில்லை..



நீ அழகா இருக்கேன்னு நினைக்கல
அது உண்மைதானே...
அதை விட சிறப்பான வார்த்தையை தேடிக்கொண்டிருக்கிறேன்...



நான் உன்னை பார்த்திருக்கும் போதே,
எனக்கு கோபமும் வருகிறது...
இமை மூடும் சிறு கணங்கள் ..
எனக்கு பிடிக்கவில்லை...

3 comments:

Anonymous said...

Nalla Irunthuchi. Ana Ore oru Kelvi. Ithu verum kavithai thana illa autographa ?

Natty said...

:) ஆட்டோக்ராஃபா இருக்கனும்னு ஆசைதான்... .ஆனா இது வெறும் கிறுக்கல்தான்.. ;)

Known Stranger said...

kadhal kadhal kadhal. konjam akarai thandi konjam sinthani thodum oru kadal kavithai izhunthungalen.