ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை
கலக்கிடாருயா கலக்கிடாருயா………………….
அவர் எழுத்துக்களை பார்த்து அவர் நினைவில் இன்றைய கிறுக்கல். ………………….பிழை பொறுக்கவும்.
வைரமுத்து.... சற்றே காசுக்காக ஆசு பாடியிருந்தாலும்,
கற்பனைக்காகவும், கவிதைக்காவும் கணை தொடுத்தவர்தாம்..
இவர் பாரதியையும், வள்ளுவரையும், சங்க பாடலையும்
நம்மவர் வாயில் வரச்செய்தவர்...
ஆம்பலும், மொவ்வலும், நமக்கு தெரியாமலே போயிருக்கும்...
குனித்த புருவம் .. அப்பாடல் மறந்து போயிருக்கும்..
தனித்தமிழ் உச்சரிப்பு, விவேக் நகைச்சுவை மட்டுமே என்று
இனி வரும் எதிர்காலம் நினைத்திருக்ககூடும்.
நன்றி கவிஞர்களுக்கு, இவர்கள் கவலைகளை மட்டும் அல்ல, காலத்தையும் வென்றவர்கள்..
3 weeks ago
No comments:
Post a Comment