Tuesday, July 15, 2008

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்



அழகான கவிதை வரிகள்.... அசை போட.....

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்


பேச எண்ணி சில நாள்,
அருகில் வருவேன்,
பின்பு பார்வை போதும் என நான்,
நினைத்தே நகர்வேனே, ஏமாற்றி
கண்கள் எழுதும்,
இரு கண்கள் எழுதும்,
ஒரு வண்ணக்கவிதை காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே,
இதில் ஓசை இல்லையே,
இதை இருளிலும் படித்திட முடிகிறதே!

இரவும் அல்லாத, பகலும் அல்லாத,
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத, படவும் கூடாத,
இடைவெளி அப்போது குறையுமா?


மடியினில் சாய்ந்திட துடிக்குதே....
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை...


கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்


கறைகள் அண்டாத, காற்றும் தீண்டாத,
மனதிற்குள் எப்போது நுழைந்திட்டாய்...

உடலும் அல்லாத, உருவம் கொள்ளாத,
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்...

உனையன்றி வேறோரு நினைவில்லை...
இனி இந்த ஊனுயிர், எனதில்லை...
தடையில்லை, சாவிலுமே, உன்னோடு வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா?
ஒரு வார்த்தை இல்லையே,
இதில் ஓசை இல்லையே,
இதை இருளிலும் படித்திட முடிகிறதே..


பேச எண்ணி சில நாள்,
அருகில் வருவேன்,
பின்பு பார்வை போதும் என நான்,
நினைத்தே நகர்வேனே, மாற்றி

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்,

3 comments:

மங்களூர் சிவா said...

அருமையான பாடல் வரிகள். அந்த புள்ளை சிரிக்கிறத பாத்துகிட்டே இருக்கலாம்.

இந்த பதிவு போட்ட வாழ்க உங்கள் கலை துண்டு ச்ச கலை தொண்டு.

Natty said...

//
அந்த புள்ளை சிரிக்கிறத பாத்துகிட்டே இருக்கலாம்.
//

தல, உங்களுக்கும் என்னை மாதிரியே கலை கண்கள்.. ;-)

PK said...

இந்த பாட்டு ரொம்ப அழகா இருக்கு!!