Tuesday, July 1, 2008

க்ரிக்கெட்

க்ரிக்கெட் - பள்ளி நாட்கள் முதலே ஏதோ இந்த விளையாட்டு மீது ஒரு தனி பிரியம்... வீட்டை விட்டு வெளியே போய் விளையாடுனா, அப்பா டென்ஷன் ஆவார். என்னுடைய க்ரிக்கெட் மோகம் எல்லாம் வாரம் ஒரு முறை 10 ரூபாய்க்கு அல்லது 7 ரூபாய்க்கு டென்னிஸ் பந்து இல்லைன்னா பெப்சி பந்து வாங்கி மொட்டை மாடியில் என்னுடைய தம்பியோட சேந்து, 10 நிமிடம் விளையாடி, பக்கத்து வீட்டில் தொலைத்த நிகழ்வுகள்தான்... அட இப்ப இல்லங்க... 15 வருடத்துக்கு முன்ன....

10ஆவது வரும் போது, கிட்டத்தட்ட எல்லா நண்பர்களும் க்ரிக்கெட் வீரர்களாக தோற்றமளிக்க... நானும் முயற்சித்தேன்... எங்க பள்ளி க்ரவுண்டில் முதல் முறை பெட்டிங் மேட்சில் என்னையும் சேர்த்த புண்ணியத்துக்காக, விக்கட் கீப்பரா நிக்க வெச்சாங்க.... பந்து நேரா வந்து.. நெஞ்சில் படார்னு பட்டது... ஒரு ரெண்டு நிமிஷம் மூச்சு நின்றது போல வலி... ஐ ஆம் ஓ.கே ன்னு பந்தா விட்டுட்டு, தண்ணி குடிக்க போரா மாதிரி ஒரு கால் மணி நேரம் எஸ்கேப் ஆனேன்...

அடுத்த கட்டமாக, பள்ளிக்கூட க்ரவுண்டு சின்னதா இருக்குன்னு, சென்னை உயர்நீதி மன்றத்தில் இருக்கும் லா-கலேஜ் க்ரவுண்டுக்கு அப்பப்ப விளையாட செல்லும் பசங்க... ஆள் குறைவா இருந்தா... என்னையும் அன்போடு கூப்பிடுவாங்க... அங்க நம்ம லா அண்ணண்கள் எங்களிடம் தங்கள் திறமையை சில சமயம் காண்பிப்பார்கள்... சும்மா ஒரு ஓவர் டானு பேட் வாங்கி கண்ணா பிண்ணானு அடிச்சு எப்படின்னு ஒரு புன்னகை... சரி நீ பேட்டிங் பண்ணுனு சொல்லிட்டு, நாம அவுட் ஆனதும் பெரிய சிரிப்பு... அண்ணா, சூப்பர்னா னு நாங்களும் சொல்லிடுவோம்..

எல்லா விஷயங்களையும் போலவே... வெளியே இருந்து பார்ப்பதற்கு மிகவும் சுலபமாக தெரியும் க்ரிக்கெட் விளையாட ரொம்ம்ம்ம்ம்ம்ப்பபப கடினமாகவே தோன்றியது.... slow ball தானேனு மெதுவா விளையாடினா... கண்ணதிரே நம்மை தாண்டி பந்து போறது, ஒரு மாதிரி நெஞ்சை கசக்கும்... ஈசி ஈசி னு சொல்லி ரொம்ப முயற்சி பண்ணா, அடுத்த பாலே வேகமா போட்டு அவுட்னு சொல்லிடுவாங்க.. ;(


கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது, ராஜூ பேட் எப்படி பிடிக்கனும்னு கத்து கொடுத்தான்.. (டாங்க்ஸ் டா, அதுக்கு முன்னாடி கூட விளையாட கூப்புட்டவங்க எல்லாமே பவுண்டரி பக்கத்துல இருந்து பால் தூக்கி போடவும், கொஞ்சமாய் காமடி பண்றதுக்கும்தான் அப்படிங்கறது ரொம்ப நாள் கழிச்சு புரிஞ்சுது)

பிரபு, ராஜூ எல்லாம் பந்தை தூக்கி போட்டு காட்ச் ப்ராக்டிஸ் பண்ண... நான் மட்டும் நண்டு பிடிக்கும் ஸ்டைலில் விரலை எல்லாம் விரித்து பந்தை பார்த்து நகர்ந்தாலும், சரியா முகத்து மேலே விழுந்தோ, கைக்கு நடுவில் ஓடியோ, ஒரு பவுன்ஸ் ஆகி வேறு திசையிலோ போய்.. இருக்கும் கொஞ்ச நஞ்ச ஈகோவையும் சுத்தமாக பிரித்தெடுக்கும்.

ஒரு பத்து அடி தூரம் மட்டும் வைத்துக்கொண்டு வீட்டில் சின்ன பசங்க கூட விளையாடுறதுன்னா, நாங்க கலக்குவோம்ல.. ;) விரல வெச்சு பந்தை சுத்தி தூஸ்ரா போடரது... ச்சின்ன பசங்க போடுற பந்தை இலாவகமா ப்லேஸ் பண்ணி ரன்ஸ் எடுக்குறது.. ஒன் பிட்ச் கேட்ச் பிடிக்கிறது... இத விட என்னோட கேமை அடுத்த லெவலுக்கு கொண்டு போகவே முடில...

இன்றும், அவ்வப்போது நண்பர்கள் க்ரிக்கெட் விளையாட கூப்பிடுவார்கள்... ஒரு ஆர்வத்தில் போய் விடுவேன்... எவ்வளவு ட்ரை பண்ணாலும், பல்ப் தான்...

மேட்ச் பாக்கும் போது, நம்ம க்ரிக்கெட் வீரர்களை வீட்டில் உள்ளவர்கள் திட்டினால்... (அட ஈசி ஷாட் , ஈசி கேட்ச், எல்லாம் விளம்பரத்துல நடிக்கத்தான் வராங்க.. etc., etc.,) நான் மட்டும் தனி கட்சி... அங்க போய் விளையாடுனாத்தான் தெரியும் எவ்வளவு கஷ்டம்னு... ;)

2 comments:

மங்களூர் சிவா said...

/
நான் மட்டும் தனி கட்சி... அங்க போய் விளையாடுனாத்தான் தெரியும் எவ்வளவு கஷ்டம்னு... ;)
/

wow

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க நட்டி தமிழ்மணத்துல இணைச்சிட்டீங்களா உங்க வலைப்பூவை!?!?!?

சரண் said...

கிரிக்கெட்ல நானும் உங்கக் கட்சிதான்..!!